Monday 6th of May 2024 08:48:01 PM GMT

LANGUAGE - TAMIL
-
புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா; பிரதி சபாநாயகராக சியம்பலாப்பிட்டிய?

புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா; பிரதி சபாநாயகராக சியம்பலாப்பிட்டிய?


இம்மாதம் 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள 9ஆவது நாடாளுமன்ற அமர்வுகளின்போது சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தனவும், பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் நியமிக்கப்படவுள்ளனர் என அரச தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்ற நிலையில் புதிய நாடாளுமன்ற அமர்வுகளுக்கு அரசு தயாராகி வருகின்றது.

நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் தெரிவு குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. அப்பதவிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச ஆகியோரை நியமிப்பது குறித்தும் ஆராயபட்டது.

அந்தவகையில் சபாநாயகராக மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளார் எனவும், பிரதி சபாநாயகராக கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நியமிக்கப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE